கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் உயிரிழந்துள்ளன.


  கிருஷ்ணகிரி அருகே நோய் தாக்கி கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் உயிரிழந்துள்ளன.
  காவேரிப்பட்டினம் அருகே உள்ள மேல்கொட்டாய் கிராமத்தில் ஆடுகளும் மாடுகளும் உயிரிழந்து வருவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இதுவரை இங்கு இருநூறுக்கும் மேற்பட்ட ஆடுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளும் உயிரிழந்துள்ளன.
  வினோத நோய் காரணமாக ஆடுகளும் மாடுகளும் உயிரிழப்பதாக இக்கிராம மக்கள் கூறுகின்றனர். இதைத் தடுக்க கால் நடைத்துறை சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
  இதற்கிடையே இப்பகுதியில் நேற்று உயிரிழந்த இரு மாடுகளின் உடல்களை உடல் கூறு சோதனைக்காக கால்நடை மருத்துவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

தருமபுரியில் இருந்து மொரப்பூர் வரை ரயில் பாதை



     ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கலாகும் நிலையில், பல்வேறு தொழில் வளங்களைக் கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தை, பிற பகுதிகளுடன் இணைக்க ரயில் வசதி இல்லை என்பது அந்த மாவட்ட மக்களின் நீண்டகால ஆதங்கமாகும். இதேபோன்று சேலத்தில் இருந்து தருமபுரி வழியாக பெங்களூருவுக்கு மின்சார ரயில் மற்றும் இரு வழிப்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
   கனிமவளம், மாம்பழம்,ரோஜா என இயற்கை வளங்களைக் கொண்ட மாவட்டம் கிருஷ்ணகிரி. இவற்றின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வருவாயை ஈட்டித் தரும் இந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களை, பிற பகுதிகளுடன் இணைக்க ரயில் வசதி கிடையாது. ஓசூர் வழியாக பெங்களூரு, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில இடங்களுக்கு மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தென் தமிழகத்திற்கும்,, சென்னை உள்ளி்ட்ட வட மாவட்டங்களுக்கும் ரயில் வசதி அறவே இல்லாதது அவர்களின் மாபெரும் கவலையாகும்.
   ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர், கந்திலி, பர்கூர், ஒரப்பம், கிருஷ்ணகிரி, சூளகிரி வழியாக ஓசூர் வரை 101 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரயில் பாதை அமைத்து போக்குவரத்து தொடங்க வேண்டும் என்பது அவர்களின் 50 ஆண்டுகால கோரிக்கையாகும்.
   இதேபோல், தருமபுரியில் இருந்து மொரப்பூர் வரை ரயில் பாதை அமைக்கப்படும் என 5 ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்னவானது எனக் குமுறுகின்றனர் தருமபுரி மாவட்ட மக்கள்... இவ்விரு நகரங்களுக்கும் இடையிலான தூரம் வெறும் 30 கிலோ மீட்டர்தான்.
   இதுபோன்று, தஞ்சை -அரியலூர் இடையே ரயில் பாதை அமைக்கப்படும் என முன்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம் காற்றோடு கலந்துவிட்டதா? என தஞ்சை மாவட்ட மக்கள் வினவுகின்றனர். இந்த ரயில் பாதை அமைந்தால், தஞ்சை-சென்னை இடையிலான பயண தூரம் குறையும் என கூறுகின்றனர் தஞ்சை மக்கள்.
                 இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

கிருஷ்ணகிரியில் எருதுவிடும் விழா: ஒருவர் பலி


    கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற எருதுவிடும் திருவிழாவில் காளைகள் முட்டி ஒருவர் பலியானார். இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே இட்டிக்கல் அகரம் கிராமத்தில் எருதுவிடும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட எருதுகள் கலந்து கொண்டன.
இந்த விழாவில் சீறிப் பாய்ந்து வந்த எருதுகளுக்கு நடுவே முகனூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் எருதும் ஓடியது. அவரைத் தொடர்ந்து நாகராஜும் ஓடியபோது, பின்னால் வந்த மற்றொரு எருது அவரை முட்டியது. இதனால் தூக்கி வீசப்பட்ட நாகராஜ் இன்று காலை உயிரிழந்தார்.
                            -இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

போலி ஆவணம் தயாரித்து நில மோசடி: 4 பேர் கைது

        ஒசூர் அருகே ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான 9.73 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே முதுகாணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த திம்மராயப்பா, வெங்கடரமணப்பா, வெங்கடேசப்பா சகோதரர்கள் தங்களுக்குச் சொந்தமான 9.73 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந் நிலையில், இவர்களது நிலத்தை, கர்நாடகா மாநிலம் சர்ஜாபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் வாங்கியுள்ளதாக கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சகோதரர்கள் அளித்த புகாரின் பேரில், நில அபகரிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில், பெங்களூரைச் சேர்ந்த ராஜப்பா, ராமப்பா, சாவித்திரியம்மாள் ஆகிய மூவரும் சேர்ந்து போலியாக பத்திரம் தயாரித்து மோசடியாக, வெங்கடேஷுக்கு ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, மோசடியில் ஈடுபட்டதாக மூன்று பேரையும், நிலத்தை வாங்கிய வெங்கடேஷையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

தர்மபுரி அருகே கலவரம் நடந்த பகுதிகளை ஆதி திராவிட நல ஆணையர் ஆய்வு

          தர்மபுரி அருகே நடைபெற்ற கலவர பகுதிகளை தேசிய ஆதிதிராவிட நல ஆணைய தலைவர் புனியா மற்றும் உறுப்பினர் லதா பிரியகுமார், இயக்குநர் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டம் பட்டி காலனி ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர். அப்பகுதி மக்களிடம் அவர்கள் விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் பேட்டியில் கூறியதாவது:-

இந்த சம்பவம் கோபத்தில் நடந்தது இல்லை. திட்டமிட்டு செய்யப்பட்ட சம்பவம். இதை திட்டமிட்ட செயலாகவே கருதுகிறோம். பல வீடுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடபட்டு உள்ளது. பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளது. இதற்கான நிவாரண பணிகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து உள்ளது. மேலும் நடவடிக்கை எடுக்கப்படடு வருகிறது. கலவரப்பகுதிகளில் 40 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்து உள்ளது.

அந்த வீடுகளை மீண்டும் ரூ.1 1/2 லட்சம் செலவில் கட்டப்பட உள்ளது. 175 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. அந்த வீடுகளை சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 122 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மொத்தம் சுமார் ரூ.6 கோடியே 95 லட்சம் சேதம் அடைந்து உள்ளது. இந்த பகுதி மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மக்கள் குடியிருப்பதற்காக ரூ.12 லட்சம் செலவில் செட் அமைக்கப்பட்டு உள்ளது.
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

விபத்தில் மாணவர் பலி பேருந்துக்கு தீவைப்பு

       கிருஷ்ணகிரி மாவட்டம் ஹொசூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவர் ஒருவர் பலியானதை அடுத்து, பொதுமக்கள் பேருந்தை தீயிட்டு கொளுத்தினர்.ஒன்னல்வாடி என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஹொசூர் போலீசார் பேருந்துக்கு தீ வைத்தது தொடர்பாக 20 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹொசூரில் இருந்து தர்மபுரிக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, ஒன்னல்வாடி பகுதியில் லாரி ஒன்றை முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்திசையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அதேபகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரகாஷ் மீது பேருந்து மோதியது. இதில் மாணவர் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இதனையடுத்து ஆத்திரம் அடைந்த அந்தப் பகுதி மக்கள், பேருந்திற்கு தீ வைத்தனர். மேலும் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
-இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

விபத்தில் மாணவர் பலி : பேருந்துக்கு தீவைப்பு

           கிருஷ்ணகிரி மாவட்டம் ஹொசூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவர் ஒருவர் பலியானதை அடுத்து, பொதுமக்கள் பேருந்தை தீயிட்டு கொளுத்தினர்.ஒன்னல்வாடி என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஹொசூர் போலீசார் பேருந்துக்கு தீ வைத்தது தொடர்பாக 20 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹொசூரில் இருந்து தர்மபுரிக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, ஒன்னல்வாடி பகுதியில் லாரி ஒன்றை முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்திசையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அதேபகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரகாஷ் மீது பேருந்து மோதியது. இதில் மாணவர் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இதனையடுத்து ஆத்திரம் அடைந்த அந்தப் பகுதி மக்கள், பேருந்திற்கு தீ வைத்தனர். மேலும் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்